Tuesday, 27 December 2011
Wednesday, 21 December 2011
Friday, 16 December 2011
Tuesday, 29 November 2011
கதையல்ல கடவுள்
பூமியில் வசிப்பவளும்
பெண் எனப்பட்டவளுமான நான்
கடவுளின் வீர தீர பராக்கிரம செயல்களை
கேட்டும் படித்தும்
அவர் மீது தீராத காதல் கொண்டேன்
உலகின் குறுக்கு வழிகளிலெல்லாம் பயணித்து
ஒரு வழியாய் அவரை அடைந்தேன்
பின் அவரை அடைந்தேன்
கடவுளுக்கும் எனக்குமான
மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட
மானிடர் அஞ்சியதால் வேறு வழியின்றி
சாத்தானின் தயவை நாடினோம்
வசீகரமான அவனது கையெழுத்தில்
தம்பதிகள் ஆனோம்
இனிமையான வாதங்களைச் சுமந்தபடி
வெளியேறியது எங்கள் முதலிரவு
வெளி அவரது வீடாக இருந்தது
வரவேற்பறை
சமையலறை
குளியலறையென
அவர் சுட்டிய அனைத்தும்
சுவர்களற்ற வெளியாகவே இருந்தது
தான் படைத்ததாக
பெருமிதத்தோடு அவர் காண்பித்த
வானம்
நட்சத்திரங்கள்
கோள்கள்
நிலவுகள்
விண்கற்கள் அனைத்துமே
உயிற்றவையாக இருந்தன
உறக்கமில்லை எனினும்
படுக்கத் தோன்றியது
பசிக்கவில்லை எனினும்
சமைக்கத் தோன்றியது
யாருமில்லை எனினும்
உடுத்தத் தோன்றியது
கூடவில்லை எனினும்
குளிக்கத் தோன்றியது
கடவுளை மனிதர் அறிந்திருப்பது
அதிர்ஷ்டவசம்
கடவுள் பூமியை அறியாதிருப்பது
துரதிர்ஷ்டவசம்
யாருமற்ற வெளி நாளுக்கு நாள்
என்னில் வெறுமையை நிரப்ப
கடவுளுக்கும் எனக்கும் இடையே
பூமி வளர்ந்த வண்ணம் இருந்தது
இன்று எங்கள் மண முறிவு நாள்
சாட்சிக் கையெழுத்திட
நீண்ட வரிசையில் மனிதர்கள்
மீண்டும் சாத்தானை அழைக்கிறோம்
முறுவலுடன் கையெழுத்திட்டு
பூமியை எனக்கு பரிசளிக்கும் அவனிடம்
ஏனோ கடவுளின் சாயல்
நானும் கடவுளும்
கைக் குலுக்கிப் பிரிந்தோம்
இப்போதும் கடவுளின் முகம்
சிலையைப் போலவே
அமைதியும் அழகும்
நிறைந்து பிரகாசிக்கிறது.
பெண் எனப்பட்டவளுமான நான்
கடவுளின் வீர தீர பராக்கிரம செயல்களை
கேட்டும் படித்தும்
அவர் மீது தீராத காதல் கொண்டேன்
உலகின் குறுக்கு வழிகளிலெல்லாம் பயணித்து
ஒரு வழியாய் அவரை அடைந்தேன்
பின் அவரை அடைந்தேன்
கடவுளுக்கும் எனக்குமான
மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட
மானிடர் அஞ்சியதால் வேறு வழியின்றி
சாத்தானின் தயவை நாடினோம்
வசீகரமான அவனது கையெழுத்தில்
தம்பதிகள் ஆனோம்
இனிமையான வாதங்களைச் சுமந்தபடி
வெளியேறியது எங்கள் முதலிரவு
வெளி அவரது வீடாக இருந்தது
வரவேற்பறை
சமையலறை
குளியலறையென
அவர் சுட்டிய அனைத்தும்
சுவர்களற்ற வெளியாகவே இருந்தது
தான் படைத்ததாக
பெருமிதத்தோடு அவர் காண்பித்த
வானம்
நட்சத்திரங்கள்
கோள்கள்
நிலவுகள்
விண்கற்கள் அனைத்துமே
உயிற்றவையாக இருந்தன
உறக்கமில்லை எனினும்
படுக்கத் தோன்றியது
பசிக்கவில்லை எனினும்
சமைக்கத் தோன்றியது
யாருமில்லை எனினும்
உடுத்தத் தோன்றியது
கூடவில்லை எனினும்
குளிக்கத் தோன்றியது
கடவுளை மனிதர் அறிந்திருப்பது
அதிர்ஷ்டவசம்
கடவுள் பூமியை அறியாதிருப்பது
துரதிர்ஷ்டவசம்
யாருமற்ற வெளி நாளுக்கு நாள்
என்னில் வெறுமையை நிரப்ப
கடவுளுக்கும் எனக்கும் இடையே
பூமி வளர்ந்த வண்ணம் இருந்தது
இன்று எங்கள் மண முறிவு நாள்
சாட்சிக் கையெழுத்திட
நீண்ட வரிசையில் மனிதர்கள்
மீண்டும் சாத்தானை அழைக்கிறோம்
முறுவலுடன் கையெழுத்திட்டு
பூமியை எனக்கு பரிசளிக்கும் அவனிடம்
ஏனோ கடவுளின் சாயல்
நானும் கடவுளும்
கைக் குலுக்கிப் பிரிந்தோம்
இப்போதும் கடவுளின் முகம்
சிலையைப் போலவே
அமைதியும் அழகும்
நிறைந்து பிரகாசிக்கிறது.
Monday, 21 November 2011
ஏனெனில் இது எனக்குமான மழைக்காலம்
எனக்கு வயது 43
கறுத்த நிறம்
பருமனான உடல்
குள்ளமான உருவம்
..... ...... ........
.... ...... .........
........ ...... .....
இருந்தாலென்ன?
நான் உள்ளே இருக்கமாட்டேன்
ஏனெனில்
வெளியே மழை
மழையில் கரைகிறது என் வயது
எதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத
எனது பால்யத்தின் கனவுகள்
மழைத்துளியின்
சிறு குமிழை
விரல்நுனி தொட்டதும்
மாய உலகென
திறந்து விரிந்து நீள்கிறது
எல்லோரும் இருக்கிறார்கள்
உயிரோடும்
உயிர்ப்போடும்
இங்கும் மழை
மேலும் கீழும் ஆட்டி
மழையோடு விளையாடும் என் கைகளுக்கு
இப்போது வயது பத்து விரல்களுக்குள்
பூச்செண்டு குரலால்
அதட்டி உள்ளே அழைக்கும் அம்மா
கைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்
அப்பா தாழம்பூ வாங்கி வர
சவுரி முடி வைத்து
நுனியில் குஞ்சம் தொங்க
பூச்சடை பின்னி விடுகிறாள்
பட்டுப் பாவாடை சட்டை
தோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து
தோழிகளோடு தட்டாமாலை சுற்றுகிறேன்
வீடுகளும் தெருவும் மலையும்
வானமும் தரையும்
ஒன்றையொன்று பற்றியபடி
எங்களோடு சுழல்கின்றன
இன்னும் மழை
மழை முத்துகளைப் பறித்து
மழைக் கம்பிகளால் கோர்த்து
கால்களில் அணிந்து
குதித்துப் பார்க்கிறேன்
கலீர் என்ற ஒலிக்கு
திடுக்கிட்டு நிற்கிறது மழை
என்னை அடையாளம் கண்டு
மீண்டும் குதூகலிக்கிறது
மழை நாளில்
பால்யத்திடமிருந்து
என்னை விடுவிக்கும்
மந்திரம் அறிவீரோ?
கறுத்த நிறம்
பருமனான உடல்
குள்ளமான உருவம்
..... ...... ........
.... ...... .........
........ ...... .....
இருந்தாலென்ன?
நான் உள்ளே இருக்கமாட்டேன்
ஏனெனில்
வெளியே மழை
மழையில் கரைகிறது என் வயது
எதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத
எனது பால்யத்தின் கனவுகள்
மழைத்துளியின்
சிறு குமிழை
விரல்நுனி தொட்டதும்
மாய உலகென
திறந்து விரிந்து நீள்கிறது
எல்லோரும் இருக்கிறார்கள்
உயிரோடும்
உயிர்ப்போடும்
இங்கும் மழை
மேலும் கீழும் ஆட்டி
மழையோடு விளையாடும் என் கைகளுக்கு
இப்போது வயது பத்து விரல்களுக்குள்
பூச்செண்டு குரலால்
அதட்டி உள்ளே அழைக்கும் அம்மா
கைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்
அப்பா தாழம்பூ வாங்கி வர
சவுரி முடி வைத்து
நுனியில் குஞ்சம் தொங்க
பூச்சடை பின்னி விடுகிறாள்
பட்டுப் பாவாடை சட்டை
தோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து
தோழிகளோடு தட்டாமாலை சுற்றுகிறேன்
வீடுகளும் தெருவும் மலையும்
வானமும் தரையும்
ஒன்றையொன்று பற்றியபடி
எங்களோடு சுழல்கின்றன
இன்னும் மழை
மழை முத்துகளைப் பறித்து
மழைக் கம்பிகளால் கோர்த்து
கால்களில் அணிந்து
குதித்துப் பார்க்கிறேன்
கலீர் என்ற ஒலிக்கு
திடுக்கிட்டு நிற்கிறது மழை
என்னை அடையாளம் கண்டு
மீண்டும் குதூகலிக்கிறது
மழை நாளில்
பால்யத்திடமிருந்து
என்னை விடுவிக்கும்
மந்திரம் அறிவீரோ?
Sunday, 13 November 2011
பவழமல்லி மரங்கள்
ஒரு பவழமல்லி மரத்தை
அவ்வளவு எளிதாக
நீங்கள் கடந்து சென்றுவிட முடியாது
இனி
எங்கேனும்
ஒரு பவழமல்லி மரத்தை
நீங்கள் காண நேரிட்டால்
நிறைவேறாதுபோன
உங்கள் உன்னதக் காதலொன்றை
அதன் செவிகளில் ஓதுங்கள்
அல்லது
தொலைவான் விண்மீனொத்த
பவழமல்லிப் பூவின்
வெண்ணிற இதழ்கள்போல அன்பில் சுடர்ந்து
அதன் செந்நிறக் காம்புகள் போல
துயரில் முடிந்துபோன
காதல் கதையொன்றைப் பாடல்களாக்கி
தன் சமூலம் முழுவதும் இசைத்துக் கொண்டிருப்பதை
செவிமடுத்துக் கேளுங்கள்
காற்றின் சுவடுகளொத்த
காதையொன்றால்
கனத்துக் கிடக்கிறது
இப்பவழமல்லி மரம்
வரலாறு தவறவிட்ட
அவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
பசுங்குடை விரித்துக் காத்திருக்கும்
இதோ இப்பவழமல்லி மரத்தின் கீழ்தான்
ஆதிக்கனி புசித்த
ஆதாம் ஏவாளின்
முதல்நாள் மனநிலையை
அவர்கள்
அடைந்ததும்
கடந்ததும்
இதோ இப்பவழமல்லி மரத்தின் கீழ்தான்
பருவங்களைப் பற்றியபடி
படர்ந்துகொண்டிருந்த
அவர்கள் உறவின் மொழிகளில்
மெய்சிலிர்த்து
அவர்களின் மீது பூக்களைச் சொரிந்ததும்
இதோ இப்பவழமல்லி மரம்தான்
பின்பு
மரபு இட்ட எச்சங்களின் நச்சு நெடியில்
புலன்கள் திணறி
ஒரு மாரிக்காலத்தின்
இருண்மையை
ஈரத்தை
விழிகளிலிருந்து வேர்களுக்கு வார்த்துவிட்டு
அவர்கள்
உடல்களால் பிரிந்து சென்றதை
ஊமையாய் பார்த்து நின்றதும்
இதோ இப்பவழமல்லி மரம் தான்
இன்றும்
அவர்களின் ஈர மொழிகளை
தன் இலைகளிலும்
பூக்களிலும்
எழுதியெழுதி
உதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன
ஒவ்வொரு பவழமல்லி மரமும்
இனியொருமுறை
ஒரு பவழமல்லி மரத்தை
அவ்வளவு எளிதாக
நீங்கள் கடந்து சென்றுவிட முடியாது.
Friday, 3 June 2011
Subscribe to:
Posts (Atom)