பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Wednesday, 21 December 2011
கிரகணம்
மூடிக்கொண்டே வருகின்றன
என் விரல்களை
உன் விரல்கள்
என் கைகளை
உன் கைகள்
என் இமைகளை
உன் இமைகள்
என் இதழ்களை
உன் இதழ்கள்
என் நெற்றியை
உன் நெற்றி
என் நெஞ்சை
உன் நெஞ்சு
என் உடலை
உன் உடல்
என் உயிரை
உன் உயிர்
இவ்வுலகை
நம் உலகு
இடையூறுகள் எதுவுமின்றி
இங்கே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஒரு
பூரண கிரகணம்.
1 comment:
Rajeshdevanathan
5 January 2012 at 11:17
காதலின் கவித்துவம் அருமை என்பதி விட என்னிடம் வார்த்தைகள் இல்லை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காதலின் கவித்துவம் அருமை என்பதி விட என்னிடம் வார்த்தைகள் இல்லை
ReplyDelete